திங்கள், 6 ஏப்ரல், 2009

தனிமை இரவுகள்

தூரத்தில்
முனகும்
நாய்

எப்பொழுதாவது
அகோரமாய்
வாகன சப்தம்

வினோத
இசையெழுப்பும்
மின் விசிறி

யாருக்காகவோ
அலறும்
தொழிற்சாலை
மணியோசை

இரவுக்காட்சிகள்
பார்த்து திரும்பும்
காலடி ஓசைகள்

கடைசி
ரயிலின்
லப் டப்

பல்லியின்
ரகசிய
ஊடல்கள்

சுவர்க்கோழியின்
மாய
ரீங்காரம்

அப்பாவின்
விபரீத
குறட்டைகள்

என
என் இரவுகள்
விரைவிலேயே
தீர்ந்து விடுகின்றன.

கருத்துகள் இல்லை: