ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

ஆறாவது உணர்ச்சி

குழந்தை அழுதால்
சனியனே என
எரிந்து விழுகிறாய்.
நான் ரசித்து போடும்
தேனீரை சலிப்புடன்
ருசிக்கிறாய்.
மழை பெய்கையில்
அலுத்துக் கொள்கிறாய்.
அதிகாலை
பனி, சூரியோதயம்
வளையும் வானவில்
சிலு,சிலுவென
வீசும் குளிர்க் காற்று,
பௌர்ணமி நிலவு
நேற்று மொட்டைமாடியில்
பூத்த ரோஜா மொட்டுக்கள்
இப்படி எதையுமே
உனக்கு ரசிக்க
தெரியவில்லை…
எப்படி சொல்வேன்
நீ என் கணவனென்று.

கருத்துகள் இல்லை: